"சென்னை வருவது சொந்த ஊருக்கு வருவது போல இருக்கு!" பிரதமர் மோடி நெகிழ்ச்சி! சொன்ன காரணம் என்ன பாருங்க
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னைக்கு வந்து இருப்பது சொந்த ஊருக்கு வந்துள்ளது போன்ற உணர்வைத் தருவதாகக் கூறினார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று சென்னை நேரு அரங்கில் நடைபெறுகிறது. இதற்காகப் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த கேலோ இந்தியா தொடக்க விழாவில், வணக்கம் சென்னை என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அதன் பிறகு தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தனது முழு பேச்சையும் இந்தியில் பேசினார். நிகழ்ச்சியில் வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இளைய இந்தியாவே புதிய இந்தியா என்று முழக்கமிட்டார்.
கேலோ இந்தியா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "2024இல் விளையாட்டுத் துறைக்குச் சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா போட்டிகள் அமைந்துள்ளன.. சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்தது போலவே இருக்கிறது.
விளையாட்டுத் துறையில் சம்பியன்களை உருவாக்கும் பூமியாகத் தமிழ்நாடு திகழ்கிறது.. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன்.. தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. நாடெங்கும் இருந்து சென்னைக்கு வந்துள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள்" என்றார்
மேலும், அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் பல சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்தியுள்ளோம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அனைத்து விளையாட்டுடன் கூடிய பிற துறைகளையும் மேம்படுத்தி வருகிறோம் என்றும் 2036இல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications