கொரோனாவைரஸ் எப்படி மிரட்டினால் என்ன.. பயமே தேவையில்லை.. டாக்டர் சுபா சார்லஸ் சூப்பர் ஆலோசனை
சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பயத்தை போக்குவது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் பலியாகி இருக்கின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

பயத்தை போக்குவது எப்படி?
இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸின் பயத்தில் இருந்து வெளியே வருவது எப்படி என்பது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பயத்தை போக்குவது எப்படி என்ற கேள்விக்கு சுபா சார்லஸ் பதிலளித்துள்ளார்.

சமூக விலகல் முக்கியம்
அரசு சொல்வதை மக்கள் கேட்டாலே போதும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வைரஸ் ஒன்றும் நமக்கு புதிதல்ல. மனிதர்கள் மூலம் பரவும் இந்த வைரஸை தடுக்க சோஷியல் டிஸ்டன்சிங் எனும் சமூக விலகல் முக்கியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டில் இருந்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

குவாரண்டைன் காலம்
மேலும் மனிதர்களிடம் இருந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே குவாரண்டைன் எனும் தனித்திருத்தல் அறிவுறுத்தப்படுகிறது. நம்மையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாக்கதான் இந்த குவாரண்டைன். நம்மை நாமே நேசிக்க இந்த குவாரண்டைன் காலம் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

மன அழுத்தம் வேண்டாம்
தனித்திருக்கும் காலத்தில் மக்கள் கோபப்படக் கூடாது. எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். பாஸிட்டிவான விஷயங்களை நினைத்து இந்த குவாரண்டைன் நேரத்தில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். இதில் கோபப்படவோ மன அழுத்தத்திற்கு ஆளாகவோ அவசியம் இல்லை என்றும் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications