கொரோனாவைரஸ் எப்படி மிரட்டினால் என்ன.. பயமே தேவையில்லை.. டாக்டர் சுபா சார்லஸ் சூப்பர் ஆலோசனை
சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பயத்தை போக்குவது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் பலியாகி இருக்கின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

பயத்தை போக்குவது எப்படி?
இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸின் பயத்தில் இருந்து வெளியே வருவது எப்படி என்பது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பயத்தை போக்குவது எப்படி என்ற கேள்விக்கு சுபா சார்லஸ் பதிலளித்துள்ளார்.

சமூக விலகல் முக்கியம்
அரசு சொல்வதை மக்கள் கேட்டாலே போதும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வைரஸ் ஒன்றும் நமக்கு புதிதல்ல. மனிதர்கள் மூலம் பரவும் இந்த வைரஸை தடுக்க சோஷியல் டிஸ்டன்சிங் எனும் சமூக விலகல் முக்கியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டில் இருந்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

குவாரண்டைன் காலம்
மேலும் மனிதர்களிடம் இருந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே குவாரண்டைன் எனும் தனித்திருத்தல் அறிவுறுத்தப்படுகிறது. நம்மையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாக்கதான் இந்த குவாரண்டைன். நம்மை நாமே நேசிக்க இந்த குவாரண்டைன் காலம் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

மன அழுத்தம் வேண்டாம்
தனித்திருக்கும் காலத்தில் மக்கள் கோபப்படக் கூடாது. எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். பாஸிட்டிவான விஷயங்களை நினைத்து இந்த குவாரண்டைன் நேரத்தில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். இதில் கோபப்படவோ மன அழுத்தத்திற்கு ஆளாகவோ அவசியம் இல்லை என்றும் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications