நாளை மிரட்டும் வெப்ப அலை.. தேர்தல் நாளில் சுகாதார நிலையங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! மக்களே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் நாளை டாக்டர்கள், பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்போர் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்போடலாம். ஓட்டுப்பதிவையொட்டி இன்றைய தினமே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட் உள்பட அனைத்து பொருட்களும் தனித்தனியே வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், நாளை தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் நாளை தமிழகத்தில் வெப்பஅலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுப்போட வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அசவுகரியங்களை சந்திக்கலாம்.
இதன் காரணமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வேண்டும். மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல், போதிய மருந்துகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதோடு போதிய அளவிலான பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி பணியாளர்கள் எந்த நேரத்தில் அழைக்கும்போதும் உடனடியாக பணிக்கு திரும்பும் வகையில் தயாராக இருக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. தற்போது கோவை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இத்தகைய சூழலில் தான் நாளை வெப்பஅலை வீசும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இதனால் முடிந்தவரை வாக்காளர்கள் காலையிலேயே சென்று ஓட்டளிப்பது சிறந்ததாகும்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications