கொட்டும் மழையில் சாலையில் படுத்த கிருஷ்ணசாமி.. புதிய தமிழகம் தொண்டர்கள் கைதை கண்டித்து தர்ணா! பரபர
சென்னை: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சி தொண்டர்களை கைது செய்ததை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட சாதிகள் அடங்கிய பட்டியல் பிரிவினருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டியல் பிரிவில் மிகப்பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கும், வட மாவட்டங்களில் ஆதிதிராவிடர் சமூகத்திற்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு வழங்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி வருகிறார்.

அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியினர் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல முடிவு செய்திருந்தனர். காவல்துறையும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அனுமதித்த நேரத்தில் போராட்டம் நடத்தவில்லை என்று கூறிய காவல்துறையினர், டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அவரது கட்சியினரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில், திடீரென டாக்டர் கிருஷ்ணசாமி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். கொட்டும் மழைக்கு மத்தியில் கிருஷ்ணசாமி, சாலையில் படுத்து தர்ணா செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"பேரணிக்கு அனுமதி வழங்கிவிட்டு, ஆயிரக்கணக்கானோர் வந்த பிறகு அனுமதி மறுப்பது என்ன நியாயம்?" என்று கிருஷ்ணசாமி போலீசாரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவரது கட்சியினருடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications