அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு.... வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: கடந்த 8:ஆம் - தேதி கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ராயல்சீமா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தற்போது தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும். ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை நான்கு சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். தற்போதைய பதிவுப்படி 2.4 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது மழையின் அளவு 37 சதவீதம் குறைந்துள்ளது.
நேற்றைய மழை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், கடும் வெயிலிலிருந்து தப்பிக்கவும், குடிநீர் பஞ்சத்தில் இருந்து மீளவும், மழையை எதிர்பார்த்திருந்த சென்னை மக்களை நேற்று மழை வந்து மகிழ்வித்தது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.
சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், மக்கள் தவித்து போகினர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது. நேற்றைய மழையால், மகிழ்ச்சி அடைந்த மக்கள் சமூக வலைதளங்களில் #chennairains என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். சென்னையில் இன்று மேகமூட்டமாக உள்ளதால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications