தமிழ்நாடு அரசியலே தலைகீழாகப் போகுது.. அய்யாவை சந்தித்த சின்னம்மா! தைலாபுரத்தில் பரபரத்த மீட்டிங்!
சென்னை: தமிழக அரசியலில் புதிதாக கூட்டணி அமையுமா? என பரபரப்பு நிலவி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் வாய்ப்புகள் மாறி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் ராமதாஸ் வசித்து வருகிறார். அங்கு இன்று சென்ற சசிகலா அவருடன் நேரடியாக சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார் என்று கூறப்படுகிறது.

சசிகலா ராமதாஸ்
இந்த சந்திப்பு சுமார் 1.30 மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலில் புதிய கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தைலாபுரம் சந்திப்பு
ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை பெரிய கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மாற்றுக் கூட்டணி உருவாக்குவது குறித்து அரசியல் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த வகையில் V. சசிகலா மற்றும் ராமதாஸ் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளும் இல்லாத ஒரு மாற்றுக் கூட்டணி உருவாக்குவது குறித்து இருவரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக சசிகலா கூட்டணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் அதிமுக தலைவர்களிடையே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகியிருந்தார். அதன் பின்னர் சில காலம் அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், சமீபத்தில் மீண்டும் அரசியல் களத்தில் செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சசிகலா புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார்.
சசிகலா புதிய கட்சி
அந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களை கொண்ட புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த நேரத்தில் கட்சியின் பெயரை உடனடியாக அறிவிக்காமல், பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது வரை அந்த புதிய கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தல்
இந்நிலையில் கட்சியின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ராமதாஸை நேரில் சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு தமிழக சட்டசபை தேர்தலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications