சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியாச்சே.. இப்படி சண்டை போட்டுக்கிறாங்களே.. சசி பேசியதாக இன்னொரு ஆடியோ!

Google Oneindia Tamil News

சென்னை: கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது என சசிகலா பேசியதாக இன்னொரு ஆடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    Sasikala பேசியதாக இன்னொரு Audio | AIADMK-வில் நெருக்கடி | Oneindia Tamil

    பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

    சரி அமமுகவை வலுப்படுத்தி தேர்தலை சந்தித்து அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என கருதப்பட்டது ஆனால் அவரோ ஒரு நாள் இரவு திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    புலி பதுங்கியது பாயத்தானோ?.. சசிகலா பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணி என்ன? புலி பதுங்கியது பாயத்தானோ?.. சசிகலா பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணி என்ன?

    அரசியல்

    அரசியல்

    அந்த அறிக்கையில் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனால் சசிகலா நிரந்தரமாக விலகுகிறேன் என சொல்லாமல் ஒதுங்குகிறேன் என சொல்லியுள்ளதால் காலம் கனியும் போது எப்போது வேண்டுமானாலும் அவரது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே சொல்லப்பட்டது.

    அதிமுக தோல்வி

    அதிமுக தோல்வி

    இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்க முடியாது என சண்டையிட்டு கொண்டனர். இருவரும் தனித்தனி லெட்டர் பேடில் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

    ஆடியோ

    ஆடியோ

    இந்த நிலையில் நேற்றைய தினம் சசிகலா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் தொண்டர் ஒருவரிடம் சசிகலா நலம் விசாரிப்பது போல் உள்ளது. அப்போது அவர் நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என சசிகலா கூறியது போல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆடியோ வெளியீடு

    ஆடியோ வெளியீடு

    இந்த நிலையில் இன்றைய தினம் இன்னொரு ஆடியோ வெளியாகியுள்ளது. இதுவும் சசிகலா தொண்டரிடம் பேசுவது போல் உள்ளது. இந்த ஆடியோவில் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

    கவலை வேண்டாம்

    கவலை வேண்டாம்

    சீக்கிரம் வருவேன்- கவலைப்பட வேண்டாம். கொரோனா குறைந்த பின்னர் எல்லோரையும் பார்ப்பேன். கட்சிக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வது பார்ப்பதற்கே வேதனையாக இருக்கிறது. சீக்கிரமே நல்ல முடிவுடன் வருவேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

    English summary
    Second audio claims Sasikala told cadres that she couldn't see that AIADMK is getting spoiled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X