கொரோனா பாதிப்பு முடியும் வரை.. பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!
சென்னை: தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வும் கடந்த 2 மாதம் முன் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு மூன்றாம் ஆண்டு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் திறக்கப்படுமா?
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கும் என்று நிறைய வதந்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது என்றும் கூட வதந்திகள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக எந்த விதமான உறுதியான தகவலும் வரவில்லை. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பான பேட்டியளித்துள்ளார்.

தயார் செய்யும் பணிகள்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில், 10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.எல்லோருக்கும் பள்ளிகள் தொடங்கும் முன் புத்தகம் வழங்கப்படும். வீட்டில் இருந்து படிக்க வசதியாக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும்.

எண்ணம் எங்களுக்கு இல்லை
தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை. அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதை ஆலோசனை செய்து வருகிறோம்.

சூழ்நிலையை பொறுத்தே
பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு இருக்கும் வரை பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சரியான நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications