கிருஷ்ணகிரி சிறுமிகளுக்கு நீதி கேட்டு போராட சீமானுக்கு நேரம் இல்லையா? விசிக வன்னியரசு தாக்கு!
சென்னை: கிருஷ்ணகிரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி ஆசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு கடந்து செல்கிறார் சீமான், கிருஷ்ணகிரி பெண்பிள்ளைகளுக்கு நியாயம் கேட்டு போராட நேரமில்லையா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5 aaம் தேதி முதல் 9 aaம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததும் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிவராமன் பள்ளியில் படித்த காலத்தில் என்சிசி மாணவராக இருந்தபோது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து என்சிசி அலுவலராக மோசடி செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடாத நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்துள்ளார் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.
வன்னி அரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிறுமிகள் என்றும் பாராமல் வன்கொடுமை செய்துள்ளான் இந்த நாதக ஆசாமி. இதை கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆறுதலாகவோ ஒரு அறிக்கை இல்லை. ஆனால் நாதக பாலியல் ஆசாமியை நீக்கி விட்டு கடந்து போகிறார் சீமான்.
மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தும் சீமானுக்கு தமிழ்நாடு - கிருஷ்ணகிரி பெண்பிள்ளைகளுக்கு நியாயம் கேட்டு போராட நேரமில்லையா? 10க்கும் மேற்பட்ட பிள்ளைகளில் ஒரு குழந்தை கர்ப்பமாகி இருக்கிறார். ராவணன் குடில் இதற்கு தான் பயிற்சி தருகிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications