பழைய கணக்கு போனா என்ன? சூப்பர் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் நாம் தமிழர் சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடங்கிய நிலையில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தமிழக மக்களின் நலனுக்காக கட்சி நடத்துவதாக கூறுகிறார். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறி ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி அடைந்தாலும் துவளாமல் மீண்டும் மீண்டும் போட்டியிட்டு வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறார்.
மக்கள் சார்ந்த பிரச்சினைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருவார். தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
அது போல் அது போல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. மே 17 இயக்க நிர்வாகியான திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் புதிதாக ட்விட்டர் கணக்கை சீமான் தொடங்கினார். செந்தமிழன் சீமான் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications