அகில இந்திய இந்து மகா சபையின் தலைவர் மீது பாலியல் புகார்.. போலீசிடம் சென்ற பொதுச்செயலாளர்!
அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.
சென்னை: அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.
அகில இந்திய இந்து மகாசபா தமிழகத்தில் செயல்படும் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். பல்வேறு மத ரீதியான பிரச்சனைகள், வழக்குகள் நடந்த போது அகில இந்திய இந்து மகாசபா முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
தமிழகத்தில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. அகில இந்திய இந்து மகா சபை என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் இருக்கிறார்.

சென்னை எப்படி
அகில இந்திய இந்து மகா சபை அமைப்பு சென்னையில் மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இந்து மகாசபா கட்சிக்கும் இது மிகவும் நெருக்கமான அமைப்பு ஆகும். சென்னையில் இந்த அமைப்பிற்கு நிறைய தொண்டர்கள் உள்ளனர்.

என்ன புகார்
இந்த நிலையில் அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது. அந்த பெண் பொதுச்செயலாரின் பெயர் வெளியிடப்பவில்லை. அந்த பெண்தான் ஸ்ரீ கந்தன் மீது புகார் கொடுத்துள்ளார்.

மோசம்
கடந்த சில மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தன்னை தாக்கி துன்புறுத்தினார். அவமானப்படுத்தினார். அசிங்கமான வார்த்தைகளால் பேசினார் என்று ஸ்ரீ கந்தனுக்கு எதிராக சென்னை போலீசில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.

கைதாக வாய்ப்பு
இவரை சென்னை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நிறைய அரசியல் தலைவர்கள் தொடர்பு இருக்கிறது. இதற்கு முன்பே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிறைய கூறி இவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications