முகிலனுக்கு கிடைத்தது ஜாமீன்.. 3 நாளைக்கு ஒருமுறை கையெழுத்து போட வேண்டும்.. ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு
முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மதுரை ஐகோர்ட்
Recommended Video
சென்னை: பாலியல் புகாரில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கி மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் முகிலன் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ச்சியாக ஸ்டெர்லைட், மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலை எதிர்ப்பு போராட்டம், என பொதுமக்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி கார்பரேட் கம்பெனிக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை முன் நடத்தியவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்.
இதன்காரணமாக, குண்டர் சட்டம் உள்ளிட்ட பல கேஸ்கள் இவர் மீது போடப்பட்டாலும் சரி, சிறைக்கு பலமுறை அனுப்பினாலும் சரி, போலீஸ் தடியடிகளுக்கு ஆளானாலும் சரி, மக்களுக்கு ஆதரவான இவர் குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருந்தது. அதனால்தான் இவர் காணாமல் போன தினத்திலிருந்தே இவருக்கு ஆதரவான குரலை மக்களே எழுப்ப தொடங்கினர்.

மனு தாக்கல்
கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சென்னை எக்மோர் ஸ்டேஷனில் மாயமான இவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனில் போலீசார் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.

எதிர்ப்பு
இதையடுத்து, ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் முகிலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக போலீசாரின் நற்பெயரை முகிலன் களங்கப்படுத்தி விட்டார், அதனால் அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தலைமறைவு
இந்த மனுமீதான விசாரணையின்போது, "கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் ஜூலை 6 வரை எங்கே தலைமறைவாக இருந்தீர்கள்.. அதை தெரிவித்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கிறோம்" என்று நீதிபதி சொன்னார். இதையடுத்து, முகிலன் சார்பில் பரபரப்பு தகவல்கள் அடங்கிய பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

நிபந்தனை
இதனிடையே, முகிலன் மீது பாலியல் புகார் அளித்த குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும், முகிலனுக்கு ஜாமீன் தரக்கூடாது என கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் கரூர் சிபிசிஐடி ஸ்டேஷனில் 3 நாட்களுக்கு ஒருமுறை முகிலன் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications