தென்தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

இந்த முறை வடகிழக்கு பருவமழை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களை அதிக அளவில் பாதித்து இருக்கிறது. முக்கியமாக தென்மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மணிமுத்தாறு, பச்சையாறு, பாபநாசம் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.
தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகள் லேசான மழை பெய்தது. கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள் சந்தை, மண்டைக்காடு, பத்மனாபபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் தென்மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
மாலத்தீவு மற்றும் அந்தமானில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மழை நீடிக்கும். இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் வாயிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications