அரண்ட திருமாவளவன்.. அண்ணாமலையிடம் நெருங்கி போனதுமே விழுந்த 'அந்த' வார்த்தை.. இது எப்போ? சபாஷ்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், விசிக தலைவர் திருமாவளவனும் திடீரென நேருக்கு நேர் சந்தித்து கொண்ட நிலையில், இருவரும் என்ன பேசினார்கள் தெரியுமா?
சொந்த கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள், இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அரசியல் நாகரீகங்களை அவ்வப்போது இழையோடவிட்டு வருவது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சமீபகாலமாகவே தந்து கொண்டிருக்கின்றன..
ரங்கராஜ் பாண்டே: சமீபத்தில்கூட, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தாயார் காலமாகிவிட்டார். அப்போது, ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதற்காக, ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. அதேபோல, பாஜக ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டேவின் அப்பாவின் மறைவையொட்டி, அவரது வீட்டிற்கும் முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்த நிகழ்வும் பெரிதும் கவனிக்கப்பட்டது.

பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. ரங்கராஜ் பாண்டேவின் கையை இறுக்கமாக பற்றி, தந்தையின் மறைவுக்கு தன்னுடைய ஆறுதலையும் சொல்லியிருந்தார்..
சந்திப்புகள்: அதேபோல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி, மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதான்.. எனினும், சில சந்திப்புகள் ஆச்சரியத்தையும் கவனத்தையும் குவித்து வருகிறது. அப்படிப்பட்ட சந்திப்புதான் நேற்றைய தினம் நடந்துள்ளது.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் அடைந்தபோது, பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.. அந்தவகையில், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்திருந்தார். பிரதமரின் இரங்கல் கடிதத்தை நேரில் வழங்குவதற்காக தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோர் நேற்று மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியை சந்திக்க சென்றார்கள்..
திருமாவளவன்: அவர்கள் 3 பேருமே காரைவிட்டு இறங்கியபோது, அங்கு ஏற்கனவே லட்சுமி பங்காருவை சந்தித்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியே வந்தார்..
திடீரென அண்ணாமலையை எதிரில் நேரில் பார்த்ததும் திருமாவளவன் திகைத்து போனார்.. பிறகு, இருவருமே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். அப்போது, அண்ணாமலையிடம் திருமாவளவன், "வாங்க... வாங்க... ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்" என்று சிரித்துக்கொண்டே கை நீட்டி வந்தார்.

அண்ணாமலை: இதைப்பார்த்ததுமே அண்ணாமலையும், திருமாவளவனின் கைகளை பிடித்துக் கொண்டு, "ரொம்ப சந்தோஷம் அண்ணா" என்று சொன்னார்.. பிறகு, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்..
பின்னர், பக்கத்திலிருந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோரிடம் கைகுலுக்கி கொண்டார். அப்போது திருமாவளவனிடம் நலம் விசாரித்த பாஜக தலைவர்கள், "உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்கள்.. திருமாவளவன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த விழுப்புரம் எம்பி ரவிக்குமார், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வணக்கம் வைக்க, பதிலுக்கு அண்ணாமலையும் வணக்கம் சொன்னார்.. ஓரிரு நிமிடங்கள் பொதுவான நலம்விசாரிப்புகளில் இந்த சந்திப்பு முடிந்த நிலையில், திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விமர்சனங்கள்: தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருபவர் திருமாவளவன்.. திமுக கூட்டணியில் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தொடர்பான எச்சரிக்கைகளை தொடர்ந்து தந்து வருபவர் திருமாவளவன்.
அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர்... அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்" என்று வலியுறுத்தி வருபவர் திருமாவளவன்.
கூட்டணி முறிவு: அதுபோலவே, அண்ணாமலையும் விமர்சித்திருக்கிறார்.. "திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை. அதனால் ஸ்டாலின் அவர்களிடம், "கூட்டணியைவிட்டு போய்விடுவேன், கூட்டணியைவிட்டு போய்விடுவேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றெல்லாம் கருத்து கூறியிருக்கிறார்.
ஆனால், அரசியல் என்பது வேறு, அரசியல் நாகரீகம் என்பதை வேறு என்பதைதான் நேற்றைய இரு தலைவர்களின் சந்திப்பு நிகழ்வுகளும் அமைந்துள்ளன.
அரசியல் நாகரீகம்: அதுமட்டுமல்ல, அரசியல் நாகரீகம் என்பது இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கி உள்ளது என்பதும் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் மேலும் நிரூபணமாகிவிடுகிறது.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications