இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும்போது செவிலியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லையா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: ஒப்பந்த செவிலியர்கள் ஊதியம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இலவசத் திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் இருக்கும்போது, கடுமையாக உழைக்கும் செவிலியர்களுக்கு ஏன் உரிய ஊதியம் வழங்க முடியவில்லை என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற பல மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஒப்பந்த முறையில் தான் செவிலியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அப்படி நியமிக்கப்படுபவர்களுக்கும் உரிய ஊதியத்தை தமிழ்நாடு அரசு வழங்காமல் அலைக்கழிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைகு வந்தது.
அப்போது, ஒப்பந்த செவிலியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி, அவர்களை தமிழ்நாடு அரசு சுரண்டுகிறது என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், பொது சுகாதாரத்தின் தூண்களாகக் கருதப்படும் செவிலியர்களுக்கு உரிய ஊதியம் வழங்காதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், "இலவசத் திட்டங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவழிக்கும்போது, மக்களின் உயிர் காக்கும் பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க மட்டும் பணம் இல்லையா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு, செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதி மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்று விளக்கம் அளித்தது. ஆனால், இதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, மாநில அரசின் கடமைக்கு மத்திய அரசைக் காரணம் காட்டுவது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications