ரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு
சென்னை: ரயில் மறியல் போராட்டத்தின் போது வண்டலூர் இரணியம்மன் கோயில் அருகே ரயில் மீது கற்களை வீசி தாக்கியதாக பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பாமகவினரை போலீஸார் வழிமறித்து கைது செய்தனர். இதனை கண்டித்து பாமக தொண்டர்கள் ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வண்டலூர் இரணியம்மன் கோயில் அருகே ரயில் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பேரிகாடுகளையும் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தாம்பரம் ரயில் நிலைய அதிகாரி அன்பழகன் ரயில் மீது கற்களை வீசியதாக 300 பேர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் ரயில் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications