அமலாக்கத்துறை பெரிய முடிவு.. ஜாபர் சாதிக்கின் சகோதரரும் அதிரடியாக கைது.. இன்று வரும் முக்கிய வழக்கு
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது சகோதரரான முகமது சலீமும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். தொடர்ந்து அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடந்ததாக புகார் எழுந்ததன் காரணமாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கைது செய்தது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆகஸ்ட் 13ம் தேதி (நேற்று) ஆஜரானார். நீண்ட விசாரணைக்குப் பிறகு முகமது சலீமை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கைதான சலீமை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிடுகையில், "போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தில் போலி நிறுவனங்கள் தொடங்கி உள்ளார். அதில் முதலீடு செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்
முகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண், "மனுதாரர் விசாரணைக்கு ஆஜாராகி முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இந்நிலையில், அவரை கைது செய்தது தேவையற்றது," என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடைமேய முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவுக்கு முகமது சலீம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (ஆக.14) தள்ளிவைத்துள்ளார். இதன்படி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம்அனுமதி தருமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications