அங்கன்வாடி மைய பணி நேரத்தில் மாற்றம்! காலை 9 டூ பகல் 12.30 வரை! தமிழக அரசு உத்தரவு
சென்னை: அங்கன்வாடி மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்பட அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து LKG மற்றும் UKG வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கீழ்க்கண்ட கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு மின்னணு நிதி (ECS) பரிமாற்ற முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தற்காலிக ஆசிரியர்களுக்கு பிரதி மாதம் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல் தேதியிலேயே ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டவாறு மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் பணிபுரியும் பள்ளியின் மூலம் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) தளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு பதிவெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை EMIS எண் பெறாதவர்கள் உடனடியாக பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளி பயன்பாட்டிலுள்ள Login-ல் ஆசிரியரின் விவரத்தினை பதிவேற்றம் செய்து EMIS எண் பெற சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கண்ட மையங்களில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் EMIS எண் பெற்ற விவரத்தினை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications