Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 75 லட்சம் ORS பாக்கெட்டுகள் ரெடி! வெயிலைச் சமாளிக்க ஆயிரம் மையங்கள்!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வருவதால், மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதைப்போல வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

Tamil Nadu government has procured 75 lakh ORS packets

அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மையங்களை அமைத்து ஒஆர்எஸ் (Oral Rehydration Solution) கரைசலைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேலைகளில் இறங்கி உள்ளது தமிழ்நாடு அரசு.

அது என்ன ஒ.ஆர்.எஸ்? அதனால் என்ன பயன்? அதை எப்படி எடுத்துக் கொள்வது? எவ்வளவு எடுத்துக் கொள்வது போன்ற பல சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்காக விளக்கத்தைப் பொதுச்சுகாதார இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர், "முன்பே இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக 2286 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவை மூலமாக ஓ.ஆர்.எஸ் பவுடர்களை கொடுத்துக் கொண்டுள்ளோம்.

Tamil Nadu government has procured 75 lakh ORS packets

அது மட்டுமே போதாது. மக்கள் அதிகம் கூடுகின்ற பேருந்து நிலையம், சந்தை போன்ற இடங்களைக் கண்டறிந்து அங்கேயும் விநியோகிக்க இருக்கிறோம். அதற்காகக் கூடுதலாக ஆயிரம் இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். ஊராட்சி மற்றும் நகராட்சி ஆகிய நிர்வாகத்தினருடன் இணைந்து இதைச் செய்ய உள்ளோம்.

இதன் ஊழியர்கள் கோடையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தரமான நீர்ப்பந்தல் அமைத்து உள்ளனர். அத்துடன் இந்த ஒ.ஆர்.எஸ். பவுடர் கரைசலையும் மக்களுக்குக் கொடுப்பார்கள்" என்கிறார்.

அது சரி, இந்த ஓ.ஆர்.எஸ் பவுடரை யார் எல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
இதற்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார் டாக்டர் செல்வவிநாயகம், "இந்த பவுடரை எல்லா வயது பிரிவினரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிக வியர்வை வெறியேற்றும்.

Tamil Nadu government has procured 75 lakh ORS packets

அதனால் உப்பு அளவு குறையும். அதைச் சமன்படுத்தவேதான் இந்த ஒ.ஆர்.எஸ் கொடுக்கிறோம்.

இதன் அளவைப் பொறுத்தவரைப் பயம் தேவை இல்லை. இதன் தன்மையே என்னவென்றால், உங்களுக்கு எவ்வளவுத் தேவையோ அதை உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்களே உணர்த்தும். அதற்கு ஏற்ப நீங்கள் இயற்கையாகவே எடுத்துக் கொள்வீர்கள்" என்றார்.

அதிகம் எடுத்துக் கொள்வதால் ஆபத்து ஒன்றும் இல்லை?

"நிச்சயம் இல்லை. நம்மிடம் ஒ.ஆர்.எஸ் பொட்டலங்கள் கிட்டத்தட்ட 77 லட்சம் வரை உள்ளன. அது போதாத பட்சத்தில் கூடுதலாகக் கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது அரசு.

Tamil Nadu government has procured 75 lakh ORS packets

ஆகவே, இதற்காக ஊருக்கு ஊர் இடங்களைத் தேர்வு செய்து வழங்கும் போது குறைந்தது 100 பாக்கெட்டுகளாவது கைவசம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

அனைத்து மாவட்டங்களிலும் இதை வழங்க ஆரம்பித்துவிட்டோம். தலைவலி வருகிறது. மயக்கம் வருகிறது. கைகால்களில் தசைப் பிடிப்பது வருகிறது. உடல் சோர்வு வருகிறது. தலைப்பாரம் ஏற்படுகிறது இப்படி அனைத்துமே இந்த வெயில் தாக்கத்தின் அறிகுறிகள்தான். இப்படி உள்ளபோது உரிய அளவு நீர் எடுக்க வேண்டும்.

நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதை மீறி உபாதை வந்தால் அலட்சியம் கூடாது. உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+