லோக்சபா தேர்தலுக்கு நாலு கால் பாய்ச்சலில் தயாராகும் திமுக.. ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின் பின்னணி
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பலருக்கும் மாவட்ட ஆட்சியராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இப்போதே நாலு கால் பாய்ச்சலில் தயாராகி வருகிறது திமுக அரசு.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் குறிப்பாக பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித் துறை இணை ஆணையர் (நுண்ணறிவு) ஐ.எஸ்.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ்.உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறை கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண்மை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், வணிக வரித் துறை இணை ஆணையர் எம்.எஸ்.சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராகவும், வழிகாட்டிப் பிரிவு செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் பி.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அனீஷ் சேகர் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ஐடி அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் நல்ல நட்புடன் இருப்பதால் அவர் ஐடி துறைக்கு சென்னைக்கு எல்காட் எம்டியாக மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்த கையோடு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.

டாஸ்மாக் எம்டி சுப்ரமணியன் மாற்றப்பட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமண மண்டபங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளித்த புகார் மாநிலம் முழுவதும் பரபரப்பை பற்ற வைத்ததை அடுத்து சுப்ரமணியன் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு உதவியாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரீட்டா, லட்சுமி என்ற இரண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் நிதித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு மே மாதம் நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக திட்டமிட்டுள்ளது. எனவே மக்கள் நலத்திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடைய செய்ய வேண்டும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications