167 கி.மீ தூரம்.. தொடங்குது சென்னையின் ஸ்பெஷல் ப்ராஜெக்ட்.. களமிறக்கப்படும் பல கோடி! ரொம்ப முக்கியம்
சென்னை: பழவேற்காடு முதல் மரக்காணம் வரையிலான 167 கி.மீ. நீளமுள்ள பக்கிங்ஹாம் கால்வாயை புனரமைக்க தமிழ்நாடு அரசு ₹2,388 கோடி திட்டத்தை வகுத்துள்ளது. கால்வாயின் ஆழத்தை மீட்டெடுக்கும் வகையில் தூர்வாருதல் மற்றும் சகதி அகற்றும் பணிகள் விரைவில் நடக்க உள்ளன.
விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக மத்திய அரசிடமிருந்து ₹20 கோடி நிதியையும் மாநில அரசு கோரியுள்ளது. இத்திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, உள்ளூர் வர்த்தகத்தையும் மேம்படுத்தும்.

மேலும், சென்னையின் நீர்வழிகளை இணைக்கும் படகு சேவைகளுடன், நீர்சார்ந்த போக்குவரத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தையும் இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையின் முன்மொழியப்பட்ட நீர் மெட்ரோ திட்டத்திற்கும் துணைபுரியும்.
சென்னை நீர் நிலை திட்டம்
2050ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்குக்கும் அதிகமான நீர் நிலை அமைப்புகள், குடிநீர் சேமிப்பு வசதிகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர் நெருக்கடியைத் தவிர்க்க, நீர்வளத் துறை (WRD) ரூ.14,000 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏரிகள் மற்றும் குளங்களை மீட்டெடுப்பது, புதிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவை அடங்கும்.
சென்னை நீர்
சென்னைக்குத் தேவையான நீர் சேமிப்பு அளவு தற்போதுள்ள 11 டிஎம்சி-யிலிருந்து 38.73 டிஎம்சி-யாக அதிகரிக்கும் என WRD-யின் ஆலோசகரான ராயல் ஹாஸ்கோனிங் டிஹெச்வி (Royal Haskoning DHV) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய, ஆலோசகர் 1,165 திட்டங்களை முன்மொழிந்தார். இதில் 704 அத்தியாவசிய திட்டங்களுக்கு WRD ஒப்புதல் அளித்துள்ளது. இவை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.
சென்னை மற்றும் பாலாறு உள்ளிட்ட 12 வடிநிலப் பகுதிகளில் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வழங்கும் தென்நேரி, ஸ்ரீபெரும்புதூர், திருநின்றவூர், மணிமங்கலம், பிள்ளப்பாக்கம் போன்ற 350 குளங்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்படும். மேலும், ஓஎம்ஆர் பகுதியிலுள்ள நாராயணபுரம், தாளம்பூர், செம்மஞ்சேரி, நன்மங்கலம் உள்ளிட்ட 64 குளங்களையும் சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் குளங்களை சிறு நீர்பிடிப்புப் பகுதிகளாக மாற்றுவதன் மூலம், ஒரு குளத்திற்கு 0.25 டிஎம்சி முதல் 0.5 டிஎம்சி வரை நீரைச் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நகர்புறப் பகுதிகளைச் சுற்றியுள்ள 1,150 குளங்களை ஆழப்படுத்துவதன் மூலமும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க மதகுகளுடன் கூடிய கரைகளை உருவாக்குவதன் மூலமும் மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளோம். மீட்டெடுக்கப்பட்ட பின், அந்தக் குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் தன்னிறைவு பெறும், பெரிய நீர்த்தேக்கங்களைச் சார்ந்திருப்பது குறையும் என்று அரசு சார்பாக கூறப்பட்டு உள்ளது.
சென்னை புதிய நீர் சேமிப்பு அமைப்புகள்
நீர்வளத் துறை தனது திட்டத்தில், இருக்கும் ஐந்து நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிப்பதை விட, மாற்று நீர் ஆதாரங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது. கூவம், அடையாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 12 புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படும். கூவம் பகுதியில் திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய இடங்களிலும், பாலாறு பகுதியில் நான்கு கிராமங்களிலும் இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
ஒவ்வொரு நீர்த்தேக்கமும் 0.5 டிஎம்சி முதல் 1 டிஎம்சி வரை நீர் சேமிப்பை அதிகரிக்கும். இதன் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் நகரின் மையப் பகுதிகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சால்ட் லேக் மற்றும் பெருமபாகத்தில் உள்ள தமிழ்நாடு செம்மொழி நிறுவனத்திற்கு அருகிலுள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய நீர்த்தேக்கங்கள் உட்பட மூன்று புதிய நீர்த்தேக்கங்களை WRD கட்டும்.
பெரம்பாக்கம் நீர்த்தேக்கம் 1.7 டிஎம்சி முதல் 2.25 டிஎம்சி வரையிலும், கிழக்கு கடற்கரைச் சாலை நீர்த்தேக்கம் மேலும் 2 டிஎம்சி வரையிலும் நீர் சேமிப்பை அதிகரிக்கும்" என்று நாகராஜன் கூறினார். இந்த நீர்த்தேக்கங்கள் பள்ளிக்கரணைக்கு நீர் வடிகால் செய்வதைத் தடுத்து, ஓஎம்ஆர் பகுதிகளுக்கு நீரைத் தேக்கி வைக்கும்.












Click it and Unblock the Notifications