தமிழக பட்ஜெட் 2019: விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் தொடரும்.. அரசு அறிவிப்பு!
தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் விலையில்லா மாடு, ஆடு திட்டம் இந்த நிதியாண்டில் தொடரும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் விலையில்லா மாடு, ஆடு திட்டம் இந்த நிதியாண்டில் தொடரும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றது. அதன்படி, 2018-19ல் 8000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்.
விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்.
தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம், என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.