ஹெச் ராஜா பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
சென்னை: ஹெச் ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுக்க விசிக தமிழக அரசை வலியுறுத்தும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சசிகலாவால் அதிமுகவை மீட்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அமைக்கப்மட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவில் தன்னை உறுப்பினராக நியமித்ததற்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்நித்தார் அப்போது பேசிய திருமாவளவன் கூறும்போது, மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு நிச்சயம் சிறப்பாக செயல்படும்.

விசிகவிற்கு வெற்றி
தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த மாநில அளவில் SC/ST பிரிவினற்கு ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை ஏற்று அரசு நடைமுறைபடுத்திருக்கிறது. தலித் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை இந்த ஆணையம் தடுக்கும் என நம்புகிறோம் இது விசிக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.

மதுரை பல்கலைக்கழகம்
மதுரை பல்கலைகழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்கள் போரட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன்.

ஜெயக்குமார்
சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்கான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்.

கேள்விக்குறி
அதிமுக-வை சசிகலாவால் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. பாஜகவோடு இணக்கமாக செயல்பட்டு பின்னடைவை சந்தித்துவரும் அதிமுக தலைமையை சசிகலா கைபற்றுவார என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் ஆனாலும் இது காலம் தாழ்ந்த முடிவு .
Recommended Video

நடவடிக்கை பாயும்
ஹெச்.ராஜா-வின் பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது. பெரியார் குறித்தும் திமுக குறித்தும் அவதூரா பேசிவரும் ஹெச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும் " இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications