தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை.. கூடுதலாக 50 லட்சம் டோஸ்களை அனுப்புங்கள்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் மக்கள்தொகை, கொரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் மெல்லக் குறைந்து வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், மாநிலத்தில் தேவைக்கு ஏற்றப்படி தடுப்பூசிகள் இல்லாததால், தடுப்பூசி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை
இந்நிலையில், தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "செங்கல்பட்டில் அமைந்துள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, இது குறித்து மத்திய அரசு விரைவாகத் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

தடுப்பூசி தேவை
கடந்த ஒரு மாதத்தில் அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தடுப்பூசி அச்சம் மக்களிடம் அகன்றுள்ளது. அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் மக்கள் தொகை, கொரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில்லை.

50 லட்சம் டோஸ்கள்
இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு மூலமும் பிற வழிகள் மூலமும் உடனடியாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும். தமிழகத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட 16.74 லட்சம் டோஸ்களை காட்டிலும் கூடுதலாக 25.84 லட்சம் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும், முன்பு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ததைச் சரி செய்ய ஏதுவாக 50 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முடங்கும் அபாயம்
தமிழ்நாட்டில் கையிருப்பிலிருந்து அனைத்து தடுப்பூசிகளும் கிட்டதட்ட முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் தடுப்பூசி பணிகள் மாநிலத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஜூன் மாதத்திற்கான தடுப்பூசியை முதல் வாரத்திலேயே அனுப்பிட வேண்டும். இதன் மூலம் தடுப்பூசி பணிகள் எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெறும்" என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தளர்வுகளற்ற ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 24ஆம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் மே 31 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பிறகு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதில் மளிகை, காய்கறி கடைகளுக்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு பிறகே மாநிலத்தில் வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications