Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் திடீர் கனமழை ஏன்.. மதியம் 1 முதல் 2 மணி வரை நடந்த மாற்றம் என்ன? வெதர்மேன் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காலையில் வெப்பம் தகித்து வந்த நிலையில் திடீரென மழை பெய்தது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை காலம் கடந்த மார்ச் மாதம் முதலே தொடங்கி அன்றாடம் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் மலைபிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவ்வப்போது பெய்யும் கோடை மழை மக்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. இதனால் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 7-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் வெப்பம் இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பும் மீண்டும் ஒரு முறை தள்ளி போயுள்ளது. அதன்படி ஜூன் 12 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜன் 14 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்றும் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Tamilnadu weatherman says that today chennai and suburbs crosses 40C

இந்த நிலையில் காலை முதல் சென்னையில் வெயில் கொளுத்தி வந்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, அண்ணாசாலை அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அது போல் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, சிங்கப்பெருமாள்கோயில், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னை திரும்பியவர்கள் இந்த மழையால் மகிழ்ந்தனர்.

இந்த திடீர் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் கடல் காற்று மதியம் 1 முதல் 2 மணி வரை வரும். இது சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+