தமிழகத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்.. பெங்களூர் போலீஸ் எச்சரிக்கை கடிதம்.. பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. ஐஎஸ் அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தியது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் தாக்குதல்
அந்த கடிதத்தில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. ரயில்களில் குண்டு வைக்க போவதாக எங்களுக்கு தகவல் வந்தது.

தொலைபேசி அழைப்பு
எங்களுக்கு வந்த தொலைபேசி தகவலில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர் என்பவர் தகவல் அளித்தார். ஓடும் ரயில்களில் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது. முக்கிய நகரங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது .

முன்னெச்சரிக்கை வேண்டும்
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஎஸ்பிக்கு பெங்களூரு காவல்துறை கடிதம் எழுதியுள்ளார்கள். இதையடுத்து தமிழக காவல்துறையை கவனமாக இருக்கும்படி தமிழக அரசின் முதன்மை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் எப்படி
தமிழகம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்துபடி போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கிறார்கள். இந்த கடிதம் காரணமாக தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications