அதிமுகவும் அமமுகவும் ஒன்றாக இணையும் -சசிகலாவை சந்தித்த தனியரசு எம்எல்ஏ பேட்டி
அதிமுக அமமுக ஒன்றிணையும் செய்தி விரைவில் வரும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக - அமமுக ஒற்றிணையவேண்டும். அந்த நற்செய்தி விரைவில் வரும் என எதிர்பார்கிறேன் என்று தனியரசு எம்எல்ஏ கூறியுள்ளார்.ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்திருக்கிறார் சிறைக்கு செல்வதற்கு முன்பு இருந்த அதே மன உறுதியுடன் நலமுடன் இருக்கிறார் என்றும் சசிகலாவை சந்தித்து பேசிய தனியரசு தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் அரசியல் ஆட்டம் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இருந்தே ஆரம்பித்து விட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் சசிகலாவை பிப்ரவரி 24ஆம் தேதியில் இருந்தே ஒரு சில அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலவங்கள் அடுத்ததுத்து சந்தித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

சசிகலாவை சந்தித்த எம்எல்ஏ
சசிகலா விடுதலைக்குப் பின்னர் இதுவரை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் நேரடியாக சென்று சந்திக்காத நிலையில் முதல்நபராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் எம்.எல்.ஏ தனியரசு சசிகலாவை வியாழக்கிழமையன்று சந்தித்து பேசினார்.

அதிமுகவின் நற்பெயர் பாதிப்பு
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக - பாஜகவுக்கு இடையே இருக்கும் உறவு அதிமுகவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். நிர்வாக ரீதியாக பாஜகவோடு உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை ஆனால் அத்தனை திட்டங்களை தொடங்கி வைக்கவும் மோடி, அமித்ஷா என பாஜகவினரை அழைக்கின்றனர். அது அதிமுக நற்பெயரை கெடுத்துவிடும்.

தனியரசு ஆருடம்
அதிமுக - அமமுக ஒற்றிணையவேண்டும். அந்த நற்செய்தி விரைவில் வரும் என எதிர்பார்கிறேன்.ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்திருக்கிறார் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு இருந்த அதே மன உறுதியுடன் நலமுடன் இருக்கிறார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக உள்ளது ஆனால் கட்சி ரீதியில் குளறுபடிகள் உள்ளன.

சசிகலாவை சந்தித்த லிங்குசாமி
ஒருவேளை அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமில்லாமல் போனால் இறுதி கட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யாருக்கு ஆதரவு என்பது குறித்து நல்ல முடிவு எடுக்கும் எனவும் கூறினார். இதனிடையே சசிகலாவை இன்று இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் பிரபு ஆகியோரும் சந்தித்தனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications