இன்ப அதிர்ச்சி.. தஞ்சாவூரில் கோட்டக் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் திடீரென வந்து விழுந்த 756 கோடி!
சென்னை: கோட்டக் வங்கி வாடிக்கையாளர் ஒருவரது வங்கிக்கணக்கில் 756 கோடி ரூபாய் இருந்ததாக மெசஜ் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைவருமே வங்கிகளையே பணம் அனுப்பவும் பெறவும் பயன்படுத்துகிறோம். ரொக்கத்தின் பயன்பாடு பெரியளவில் குறைந்தே வருகிறது. நாம் யுபிஐ போன்ற முறைகளில் பணத்தை அனுப்பி வருகிறோம்.

இதற்கிடையே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் அதிகளவில் பணம் வந்து விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் இப்படித்தான் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் ரூ. 9000 கோடி வரவு வைக்கப்பட்டது. இது மிகப் பெரிய சர்ச்சையானது.
இந்தச் சூழலில் மீண்டும் அதேபோல ஒரு சர்ச்சை சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரில் கோட்டக் மஹேந்திரா வங்கி கணேசன் என்ற வாடிக்கையாளர் கணக்கில் ரூ. 756 கோடி பேலன்ஸ் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நேற்றிரவு கணேசன் நண்பருக்கு அவர் யுபிஐ மூலம் பணம் அனுப்பியுள்ளார். அப்போது பேலன்ஸ் தொகை என்று அவருக்கு ரூ.756 கோடி இருப்பதாக வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. காலையில் அவர் உடனடியாக இது குறித்து வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
பின்னர் வங்கி மேலாளரைச் சென்று சந்தித்தபோது கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தியைப் பெற்றுக் கொண்டு, செல்போன் நம்பரை வாங்கி வைத்துள்ளனர். என்ன விஷயம் என்பதைக் கண்டறிந்து தொடர்பு கொள்வதாகச் சொல்லி வாடிக்கையாளரை அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், வங்கி சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.

இது குறித்து கணேசன் கூறுகையில், "நேற்றிரவு நான் எனது கோட்டக் வங்கியில் இருந்து நண்பருக்குப் பணம் அனுப்பினேன். பணம் அவருக்குச் சென்றுவிட்டது. இருப்பினும், பணம் மீண்டும் எனக்கு வந்துவிட்டதாகவே எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தான் எனக்கு பேலன்ஸாக 756 கோடி இருப்பதாக இருந்தது.
இது தொடர்பாகக் காலை நான் வங்கியில் சென்று கேட்டேன். வங்கி ஊழியர்களுக்கும் சரி, மேலாளர்களுக்கும் சரி இது குறித்து எதுவும் தகவல் தெரியவில்லை. மேலாளரை மீட் செய்த போது அவர் மெசேஜ், மற்றும் மொபைல் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பிறகு எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications