நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான அதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டதன் காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அதிதீவிர நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக மழை காரணமாக சென்னை தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
புயல் கரையை முழுமையாக கடந்து சென்றுவிட்டதால் சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வழக்கமான விமான சேவை விரைவில் துவங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications