சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் 25 புறநகர் மின் ரயில் நேரம் மாற்றம்
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காகவும், ரயிலின் இயக்க காரணங்களுக்காகவும் பல்வேறு மார்க்கங்களில் நாளை முதல் 25 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவையை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்த ரயில் சேவை ஒருநாள் பாதிக்கப்பட்டாலே மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் என பலரும் ரயில் போக்குவரத்தை நம்பியே உள்ளனர். குறைந்த கட்டணம், விரைவு சேவை போன்ற காரணத்தால் சென்னை மக்களின் முதல் தேர்வாக மின்சார ரயில்களே உள்ளன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக சில மெயில் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகவும், ரயில் இயக்க காரணங்களுக்காகவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சில மார்க்கங்களில் புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரல் - திருத்தணி செல்லும் ரயில்களின் நேரம் மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு உள்ளிட்ட மார்க்கங்களில் குறிப்பிட்ட சில ரயில்களின் நேரம், ரயில் எண்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. ஜனவரி 2 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. வார நாட்களில் மட்டுமே இந்த ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தவிர புறநகர் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருத்தணி காலை 7.25 மணி ரயில் ஆவடியில் காலை 8.10 மணிக்கும், சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 7.35 மணி ரயில், ஆவடியில் காலை 8.15 மணிக்கும் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - திருத்தணி இரவு 8.10 மணி ரயில், கடற்கரை - திருவள்ளூர் இரவு 8.15 மணி ரயில், சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 9.10 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
கடற்கரை - ஆவடி இரவு 9 மணி ரயில், சென்ட்ரல் - பட்டாபிராம் இரவு 10.40 மணி ரயில், கடற்கரை - ஆவடி இரவு 10.10 மணி ரயில் ஆகியவற்றின் எண் மாற்றப்படுகிறது. திருத்தணி - சென்ட்ரல் மார்க்கத்தில் 6 ரயில்களின் நேரம், எண் மாற்றம் செய்யப்பட உள்ளது.
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் 15 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. கடற்கரை - தாம்பரம் காலை 6.01 மணி, காலை 10.01 மணி ரயில், கடற்கரை - செங்கல்பட்டு மாலை 5.55 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்படுகிறது.
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் - அரக்கோணம் மார்க்கத்தில் 22 ரயில்களின் நேரம், எண் மாற்றப்படுகிறது. ஆவடி - சூலூர்பேட்டை மார்க்கம் (வழி: கும்மிடிப்பூண்டி), கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
அந்த வகையில், மொத்தம் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications