திராவிட மாடல் என ஒன்று இல்லை.. திமுக விமர்சித்தால் ஆளுநர் சும்மா இருப்பாரா? செல்லூர் ராஜூ
சென்னை: திராவிட மாடல் என ஒன்றும் இல்லை, ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல் என்றும் ஆளுநரை இழிவாக பேசினால் எந்த ஆளுநர் பேசாமல் இருப்பார். யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வைகை ஆற்றில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்தது இல்லை. நேற்று ஆழமான பகுதிக்கு போகக்கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்து கண்காணித்து இருந்தால் இந்த துயர சம்பவம் நடந்து இருக்காது. வெறும் 250 மீட்டர்தான் உள்ளது. இதில் 3 பேர் இறந்துள்ளனர்.

காவல்துறை என்ன கண்காணிப்பு செய்கிறது. முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை கூடாது என்றுதான் சொல்கிறேன். இந்த ஆட்சியில் நிர்வாகம் குளறுபடியாக உள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். பாஜகவும் இதையே சொல்லி வருகிறது. ஆனால், இந்த அரசு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழக அரசு உள்ளது.. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் அமைதி பூங்காவாக உள்ளது என ஊடகங்களில் பேசி வருகிறார். ஆனால், இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு. இனிமேல் எந்த ஒரு திருவிழாவாக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் இருக்கக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஆளுநர் கருத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவரைப் பற்றி திமுகவினர் பேசுகிறார்கள். திமுகவினர் விமர்சனம் பண்ணும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார். ஆளும் கட்சியாக திமுக உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆளுநரிடம் செல்ல வேண்டும். ஆளுநரிடம் தான் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். அப்படியிருக்கும் போது ஆளுநரை இழிவாக பேசினால் எந்த ஆளுநர் பேசாமல் இருப்பார். யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள்.
மின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ஒருநாளில் பலமுறை மின்சாரத்தை கட் செய்து வருகிறார்கள். உண்மையான விடியலை மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அமித்ஷாவை பார்க்கும் போது தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களை அழைத்து செல்லவில்லை என்று கேட்கிறீர்கள்.. இதில் எந்த சர்ச்சையும் இல்லை. பொதுச்செயலாளர் விரும்பியவரை அழைத்து செல்லலாம். உங்கள் பார்வையில் அப்படி தெரிகிறது.

எங்கள் கட்சியில் குழப்பம் வராதா என நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு தென் மாவட்டம், வட மாவட்டம், மேற்கு மாவட்டம், என்ற எண்ணமே அவருக்கு கிடையாது. அனைவரும் பொதுச்செயலாளர் தான் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் சொல்வார். இது மாதிரி ஒரு தலைவரை பார்க்க முடியுமா? திராவிட மாடல் என ஒன்றும் இல்லை, ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன?











Click it and Unblock the Notifications