Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. உறுதியாக நின்ற தமிழக அரசு.. பாராட்டிய நடிகை ரோகிணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை நடிகை ரோகிணி பாராட்டி வரவேற்றுள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதவெறியை ஆதரிக்கும் கட்சிகள், அவர்களுக்கு துணை போகிற கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியதோடு, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தி தடுத்து நிறுத்தியது.

Thiruparankundram Issue

பின்னர் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்ட போது, போலீசார் மனுதாரரை மலையேறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் சட்டம் - ஒழுங்கு காரணம் காட்டி போலீசார் மலையேறுவதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பின்னர் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

நாடாளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதனிடையே தமிழக அரசின் நடவடிக்கைக்கு முற்போக்கு அமைப்புகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் நடிகை ரோகிணி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ரோகிணி, எழுத்தாளர் ஆதவன் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டுகிறோம்.. வரவேற்கிறோம்.. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதவெறியை ஆதரிக்கும் கட்சிகள், அவர்களுக்கு துணை போகிற கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும். இந்திய அரசியல் ஜனநாயகத்திற்கு மத்திய அரசால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+