திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. உறுதியாக நின்ற தமிழக அரசு.. பாராட்டிய நடிகை ரோகிணி!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை நடிகை ரோகிணி பாராட்டி வரவேற்றுள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதவெறியை ஆதரிக்கும் கட்சிகள், அவர்களுக்கு துணை போகிற கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியதோடு, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தி தடுத்து நிறுத்தியது.

பின்னர் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்ட போது, போலீசார் மனுதாரரை மலையேறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் சட்டம் - ஒழுங்கு காரணம் காட்டி போலீசார் மலையேறுவதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பின்னர் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
நாடாளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதனிடையே தமிழக அரசின் நடவடிக்கைக்கு முற்போக்கு அமைப்புகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் நடிகை ரோகிணி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ரோகிணி, எழுத்தாளர் ஆதவன் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டுகிறோம்.. வரவேற்கிறோம்.. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதவெறியை ஆதரிக்கும் கட்சிகள், அவர்களுக்கு துணை போகிற கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும். இந்திய அரசியல் ஜனநாயகத்திற்கு மத்திய அரசால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications