சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது இப்படித்தான்.. இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் சொன்ன சீக்ரெட்
சென்னை: தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வதோடு கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது என்றும், சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேசினார்.
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர்கல்வித்துறை சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்' என்ற பெயரில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்சியை காண நேரலையில் காணும் வகையில் 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் லிங்க் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் நிகழ்ச்சியை பார்த்தனர். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மறு ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சூரியனை ஆய்வு செய்ய விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா- எல்1 விண்கலம் திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி, சந்திரயான்-3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் ப. வீரமுத்துவேல் உள்பட 9 இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, சான்றிதழும், திருவள்ளூவர் சிலையையும் வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பேசினர். அந்த வகையில், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேசுகையில் கூறியதாவது:- நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை.
எப்படி புரிந்து படிப்பது என்பதுதான் முக்கியம். படிக்கின்ற கால கட்டத்திலேயே சின்ன சின்ன புராஜெக்ட்களை செய்து பாருங்கள். செய்முறை அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அதோடு , புது, புது தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சந்திரயான்-2 திட்டத்தில், தோல்வியை பார்த்து அச்சப்படகூடாது என்பதை நாங்கள் முதலில் கற்றுக் கொண்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வதோடு கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரையும் பிரக்யான் ரோவரையும் நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே பணியாற்றினோம். இதற்காக நிறைய சோதனைகளை மேற்கொண்டோம். நிலவு போன்ற சூழலை பூமியில் உருவாக்கி நிறைய சோதனைகளை செய்தோம். இதுவே வெற்றிக்கு காரணம்.. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு பணியை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். எந்த துறையில் இருந்தாலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications