நாளை சென்னை போறீங்களா? நெல்லை - செங்கல்பட்டு இடையே நாளை சிறப்பு ரயில்.. முன்பதிவு ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வந்துள்ளனர். இவர்கள் மீண்டும் சென்னை நோக்கி செல்ல வசதியாக திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு நாளை (அக்டோபர் 13) சிறப்பு ரயில் என்பது இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.

நேற்று சரஸ்வதி பூஜை. இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையாகும். இப்படி தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் வேலை செய்து வந்த தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த 10ம் தேதி புறப்பட்டு வந்தனர்.

special train indian railway

நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடினர். இன்று விஜயதசமியை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். பலரும் கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பலரும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னை நோக்கி புறப்பட உள்ளனர். இதனால் பஸ் மற்றும் ரயில்களில் நாளை கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் தான் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தெற்கு ரயில்வே சார்பில் இருமார்க்கமாக திருநெல்வேலி - செங்கல்பட்டு வாராந்திர பூஜை கால சிறப்பு ரயில் (வண்டி எண்: 06003/06004) இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 3 நாள் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு நாளை சென்னை திரும்புவோருக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சிறப்பு ரயில் என்பது நாளை திருநெல்வேலியில் இருந்து புறப்பட உள்ளது. அதன்படி நாளை மாலை 5.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06003) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து அக்டோபர் 14ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்த ரயில்கள் இருமார்க்கமாக கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டிக்கல், மணப்பாறை, திரசு்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன. பொதுமக்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏசி பெட்டி 2, 10 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி, 3 பொதுப்பெட்டி, 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்ஸ் + மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி என்பது இருக்கும். என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+