கிளாம்பாக்கத்தில் இன்று ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம் இதுதான்.. போக்குவரத்துத்துறை பரபர விளக்கம்!
சென்னை: கிளாம்பாக்கத்தில் இந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் கொந்தளித்த நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாகவே பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாத இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் வசதி இல்லாமல், பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கே சென்றடைய முடியவில்லை என புகார்கள் எழுந்தன. மேலும், வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் செல்ல பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டி அவசர கதியில் திமுக அரசு பொங்கலுக்கு முன்பே திறந்து வைத்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டது முதலே எதிர்க்கட்சிகள் திமுக அரசை இந்த விஷயத்தில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்தனர். தங்கள் ஊருக்குச் செல்ல போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கினர்.
இன்று அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் பரவிய நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம்.@official_kcbt… pic.twitter.com/iJvpeZH6qa
— CMDA Chennai (@CMDA_Official) February 10, 2024
மேலும், ஊருக்கு போக போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளையும் செயல்படுத்தும் வரை கோயம்பேட்டுக்கே பேருந்து நிலையத்தை மாற்றுமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இன்று அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் பரவிய நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications