ஹிட்லரையும் மிஞ்சிய டிரம்ப்? வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எல்லாரும் இணையணும்: பழ.நெடுமாறன்
சென்னை: உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக ஒன்றிணைந்து டிரம்பின் வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், நிலவி வரும் அச்சமான சூழலுக்கு எதிராக செயல்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி மற்றும் சில முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்
இதற்கு பதிலடியாக ஈரான், ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையில், அலி காமேனியின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கு முன்பே தான் அவர்களைக் கொன்றதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதல் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்... எனவே உலக நாடுகள் இந்நிகழ்வுகளை உற்று கவனித்து வருகின்றன..
பழ நெடுமாறன்
இந்நிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மறைந்த பாசிசத் தலைவர் ஹிட்லரை விடவும் கொடிய குற்றவாளியாக டிரம்ப் திகழ்கிறார்.. அவர் உலகிற்கே பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளார்..
காமேனி படுகொலை
உக்ரைன் நாட்டு அதிபரை பொதுவெளியில் அவமதித்த டிரம்ப் முன்னதாக வெனிசுலா நாட்டின் மீது படையெடுத்து அங்கிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்.. வெனிசுலா நாட்டு அதிபர் மற்றும் அவரது துணைவியாரை கைது செய்து சிறையில் அடைத்து,சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்,. தற்போது ஈரான் மீது படையெடுத்து அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா அங்குள்ள உச்ச தலைவர் காமேனியைப் படுகொலை செய்துள்ளது..
அமெரிக்க அதிபர் டிரம்பின் இத்தகைய தொடர் ராணுவ அத்துமீறல்களால் உலகில் எந்தவொரு நாடும் இனி பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அச்சமான சூழல் உருவாகியுள்ளது.. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் டிரம்பின் இத்தகைய வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அனைத்து உலக நாடுகளுக்கும் உண்டு..
எனவே உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக ஒன்றிணைந்து இதற்கு எதிராகச் செயல்பட முன்வர வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications