Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.. TRUST திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு! வெளியானது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் பிப் 1 ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வு தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த திறனாய்வு தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 1000 என நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

schools students scholarship

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு எழுத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மாநிலம் முழுவதும் டிசம்பர் 2-வது வாரம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் இந்தத் தேர்வு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரகத் திறனாய்வு தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து துறையின் இயக்குநர் என்.லதா வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சாரணர் இயக்குநரகத்தின் வைர விழா திருச்சியில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதையொட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வானது தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+