Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக கண்ட்ரோல் எடுக்கும் உதயநிதி.. வெளிநாடு பறக்கும் ஸ்டாலின்.. ஆட்சி நிர்வாகம் அப்படியே மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. துணை முதல்வருக்கு இணையான பதவியோடு அவர் பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன.28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு செல்கிறார்; 600க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்
திட்டமிட்டதை விட அதிக முதலீடு ஈட்டப்பட்டுள்ளது; உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறும் என்று இந்த பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin to take control of power during the CM Stalin foreign trip says sources

உதயநிதி ஸ்டாலின் பவர் : தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். முதல்வருக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் நாட்களில் அதை பெரும்பாலும் கவனிப்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். முக்கியமாக சென்னை, தென் மாவட்ட வெள்ளத்தில் இருந்து ஆட்சி நிர்வாகத்தில் பெரும்பாலும் பணிகளை கவனித்துக்கொள்வது உதயநிதி ஸ்டாலின்தான்.

துணை முதல்வர்: இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் கூட கூறப்பட்டது. ஆனால் துணை முதல்வர் பதவிக்கு முன்பாக அவருக்கு கட்சிப்பணியை முழுமையாக கவனிக்கும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் உயர் கல்வித்துறை பொறுப்பு செல்வதற்கு கூட உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும், கட்சி பணியை கவனிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாது என்பதாலும், அறிவாலயத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை முழுமையாக நம்பமுடியாது என்பதாலும் தனது நண்பர் அன்பகம் கலையை அறிவாலயத்துக்குள் கொண்டுவந்தார் ஸ்டாலின்.

என்ன பணி?: 2021 ஜூலையில், திமுகவின் துணை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் கலை. தமிழ்நாடு முழுவதும் வருகிற கட்சி தொடர்பான புகார்களை கவனிக்க வும், அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் மீதான புகார்கள் இருப்பின் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கலைக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின்.

அதன்படி, கட்சி பஞ்சாயத்துகளை கவனித்து வந்தார் கலை. இந்தநிலையில், உதயநிதி அமைச்சரானதை அடுத்து, அரசு நிர்வாக ரீதியிலான முக்கிய விசயங்களை கவனிக்கும் பொறுப்பு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டது. அதற்கேற்ப சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை என்ற முக்கியமான துறை உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கவனித்து வரும் பல முக்கிய பொறுப்புகளையும், கட்சி ரீதியிலான பிரச்சனைகளை கூடுதலாக கவனிக்கும் படியும் உதயநிதியிடம் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.

வெளிநாடு பயணம்: முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

சில முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த பயணத்திற்கு இடையில்தான் தமிழ்நாட்டில் முக்கியமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனித்துக்கொள்ள உள்ளார்.

கட்சி பணிகள்: கடந்த சில காலமாகவே அதன்படி, ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகம் இரண்டையும் கவனித்து வந்தார் உதயநிதி. இதனால், உதயநிதி தங்கியிருக்கும் குறிஞ்சி இல்லத்தில் தினந்தோறும் அதிகாரிகளினுடனான ஆலோசனையும், கட்சி ரீதியிலான பஞ்சாயத்துகளும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி தொடர்பான முழுமையான பணிகளையும் பிரச்சனைகளையும் கவனிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாராம் ஸ்டாலின்.

Udhayanidhi Stalin to take control of power during the CM Stalin foreign trip says sources

இதனால், குறிஞ்சி இல்லத்தில் கட்சி பிரச்சனைகளை கவனிப்பதைவிட தினமும் அறிவாலயம் வந்து கவனிக்கச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்கிறது அறிவாலய தரப்பு. அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ளவிருகிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கூடுதல் பொறுப்பு: தேசிய அரசியலில் பாஜக கட்சி மற்றும் பாஜகவின் டாப் தலைவர்கள் திமுகவை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில்தான் அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் தற்போது ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்கிறார். முக்கிய முடிவுகளை எடுப்பது எல்லாம் பெரும்பாலும் முதல்வர் ஸ்டாலின்.இனி கட்சி பணிகளில் உதயநிதி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+