தமிழக டிஜிபி எந்த பதிலும் அளிக்கவில்லை.. மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி லோக்சபாவில் பரபரப்பு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை அளிக்குமாறு தமிழ்நாடு போலீஸ் டிஜிபியை அமலாக்கத்துறை மூன்று தடவை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை டிஜிபியிடம் இருந்து பதில் வரவில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்படி வருமான வரி சோதனை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், "2019-2020 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 980 குழுமங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது அதில், மொத்தம் ரூ.5 ஆயிரத்து 95 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில், சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தமிழ்நாட்டில், 28 அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கான்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை அளிக்குமாறு தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யை அமலாக்கத்துறை மூன்று முறை வலியுறுத்தியது. ஆனால் இதுவரை டி.ஜி.பி.யிடம் இருந்து பதில் வரவில்லை.
வருமான வரி கணக்கு தாக்கல் குறித்த கேள்விக்கு அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், கடந்த 2022-2023 நிதியாண்டில், 7 கோடியே 40 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 16 லட்சம் பேருக்கு வருமான வரி வரவில்லை. வருமான வரி தாக்கல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேரடி வரி வசூல் ரூ.16 லட்சத்து 63 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது" என்றார்.
மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடந்தது: தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தடதடத்த இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த கூறப்பட்டது. போலியான நடைச்சீட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அள்ளியதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மணல் அள்ளியது போன்ற பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஒருசில அதிகாரிகள் நடந்த தவறுகள் அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பாக விளக்கம் கேட்க திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது சர்ச்சையானது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பிலும், அந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் சம்மனுக்குத் தடை விதிக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்குத் தடைவிதித்தும், அதேநேரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை இல்லை என்றும் தெரிவித்தது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications