மஞ்சள் படை அணிவகுப்பு! 2,000 இளைஞர்கள் ரெடி! ராமதாஸிடம் ஆலோசனைக் கேட்ட வன்னியர் சங்கத் தலைவர்!
சென்னை: வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை குறித்து பாமக நிறுவனர் ராமதாசிடம் ஆலோசனைக் கேட்டிருக்கிறார் பு.தா. அருள்மொழி.
கடந்த மார்ச் 18ஆம் தேதி அன்று வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் வன்னியர் சங்கத்தின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் நடப்பாண்டில் வன்னியர் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அந்த வகையில் வன்னியர் சங்கம் சார்பில் மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வன்னியர் சங்கத்தலைவர் பு.தா. அருள்மொழியும், வன்னியர் சங்கத் துணை தலைவர் ரவி ராஜூம் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து அது தொடர்பான டிஸ்கஷனில் ஈடுபட்டனர்.
மேலும், மஞ்சள் படை அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ள இரண்டாயிரம் இளைஞர்களின் பெயர் பட்டியலையும் ராமதாஸிடம் வழங்கினர். அதுமட்டுமல்ல அக்னிக்கலசம் தாங்கிய மஞ்சள் நிற டீஷர்ட், கைகளுக்கு வெள்ளை உறை, தொப்பி, அடையாள அட்டை, சர்டிபிகேட் என அணிவகுப்பு மரியாதையின் போது அணிய வேண்டிய உடைமைகளையும் ராமதாஸிடம் காட்டினர்.
அவரும் சில திருத்தங்கள் கூறியிருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள இந்த மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications