வீராணம் ஏரி என்ன இப்படி ஆகிடுச்சு.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியின் நிலையை பாருங்க
சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி வறண்டு போகும் நிலையில் காணப்பபடுகிறது. இந்த ஏரியில் தற்போது, வெறும் 21 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சென்னை நகருக்குள்ளேயே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.. சென்னை மக்களுக்கு குடிநீர் தினசரி வழங்க செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் தேக்கப்படுகிறது.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு வடகிழக்கு பருவ மழை தான் முக்கிய நீர் ஆதாரம், இதுதவிர ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரும் சென்னைக்கு குடிநீர் நீர் ஆதாரமாக விளங்குகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) ஆகும். ஆனால் இதில அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்து 217 மில்லியன் கன அடி (9.2 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தினமும் சராசரியாக ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, மாதம் 1 டி.எம்.சி. வரை குடிநீருக்கு விநியோகிக்கப்படுகிறது. நீர் வேகமாக குறைவதுடன், வெயில் காரணமாக ஏரிகள் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது,
குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 188 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 16, புழல் ஏரியில் இருந்து 189 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 130 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இது தவிர கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் இருந்து கணிசமாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி. 1,465 மில்லியன் கன அடி(1.4 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இந்த ஏரியாகும்.. இதில் தற்போது, வெறும் 21 மில்லியன் கன அடி(1.43 சதவீதம்) மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் இங்கிருந்து குடிநீருக்காக 48 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் வீராணம் ஏரியில் 1,221 மில்லியன் கன அடி(1.2 டி.எம்.சி.) இருப்பு இருந்தது. ஆனால் தற்போது வெறும் 21 மில்லியன் கன அடி இருப்பதால் விரைவில் இந்த ஏரி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே வீராணம் ஏரியை நிரப் அதிகாரிகள் புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications