"நீயா".. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.. 7 முறை அலறி அலறி ஓடிய விவசாயி.. என்னன்னு பாருங்க
7 முறை விவசாயியை ஒரு பாம்பு பழி வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள்
லக்னோ: விவசாயியை ஒருவரை பாம்பு ஒன்று பழிவாங்கி கொண்டே இருக்கிறதாம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களில்தான் நாம் வீடு கட்டி கொண்டு வாழ்ந்து வருகிறோம்.. ஆனால், நம்முடைய இடத்துக்கு பாம்பு வந்துவிட்டதாக நினைக்கிறோம்.. எனவே இதுவே தவறான கருத்து.
அதேபோல, பாம்புகளை கண்டதும் நாம் ஒதுங்கி நின்றுவிட்டால், அது நம்மை கடந்து போய்விடும்.. பாம்புகள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்கள்கூட, தங்களுக்கு ஆபத்து நேரும்போதுதான், தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக தாக்குதல் நடத்துகின்றன...

அடையாளம்
உண்மையை சொல்லப்போனால் நம்மை பார்த்ததும் பாம்புகள் வேகமாக ஓடி ஒளிந்துகொள்கின்றன.. அடிபட்ட பாம்புகளை பொருத்தவரை அவைகள் உயிருடன் இருப்பதே கடினம். அப்படியே உயிருடன் இருந்தாலும் அது ம்மை உங்களைக் கண்டு பயந்துகொண்டிருக்கும்... அதனால், அடையாளம் வைத்துக்கொண்டு, பழி வாங்கும் அளவுக்கு எல்லாம் பாம்புக்கு மூளை இல்லை... பார்வை திறனும் குறைவு... எனவே பாம்பு பழிவாங்கும் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை.. இதுவும் தவறான கருத்துதான்.

கற்பனை
ஆனாலும், நீயா உட்பட பல சினிமாக்களில் பாம்புகள் பழிவாங்குவதாக காட்டப்படுகிறது.. அதுவும், ஜோடியாக இருக்கும் ஒரு பாம்பை கொலை செய்தால், இன்னொரு பாம்பு அந்த பாம்பை கொன்றவரை பழி வாங்குவதற்காகவே பல ஜென்மங்கள் எடுத்து வந்திருப்பதை கண்டிருக்கிறோம்.. இதெல்லாம் கற்பனை என்றாலும், நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. உபி மாநிலம் ராம்பூர் மாவட்டம் தானாஸ்வர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விவசாயி
எஸ்ஸான் அலி என்பவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார்.. இவர் ஒரு விவசாயி.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.. அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது.. இதை பார்த்ததும் எஸ்ஸான் அலி அந்த பாம்பின் மீது கல்லை எரிந்து கொல்ல முயன்றார்.. அதில் ஒரு பாம்பு இறந்துவிட்டது... இன்னொரு பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயே சென்றுவிட்டது.

அலறல்
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. இதனால் வலி பொறுக்க முடியாமல் எஸ்ஸான் அலி அலறி கத்தியுள்ளார்.. அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார்..

உயிர் தப்பினார்
ஆனால், மறுபடியும் அதே பாம்பு அங்கு வந்து, அவரை மீண்டும் அவரை கடித்துவிட்டது.. இப்படியே ஒரே பாம்பு மொத்தம் 7 முறை கடித்துள்ளது. 7 முறையும் உயிர் தப்பி உள்ளார்.. 7முறையும் அக்கம்பக்கத்தினர்தான் இவர் உயிரை காப்பாற்றியுள்ளனர். 7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் என்றும், அதுதான் இப்படி வந்து தன்னை பழிவாங்குகிறது என்றும் எஸ்ஸான் அலி வலுவாக நம்புகிறாராம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications