கரூர் நெரிசல் பலி.. “இதயம் நொறுங்கிப் போய் வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்” - விஜய்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தால் தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என விஜய் கூறியிருக்கிறார்.
தனது எக்ஸ் தளத்தில், "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.













Click it and Unblock the Notifications