காங்கிரசில் இருந்து விஜயதாரணி இதனால் தான் விலகியிருப்பார்.. சீமான் சொல்லும் காரணத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் காங்கிரஸ் கட்சியே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை என்று நினைத்து பாஜகவிற்கு விஜயதாரணி சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது மதித்து 3 முறை வாய்ப்பு கொடுத்தது, ஆனால் பாஜக இதை செய்யுமா என தெரியாது என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த கையோடு தனது எம்.எல்.ஏ பொறுப்பையும் ராஜினமா செய்துள்ளார். கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் போட்டியிட விஜயதாரணி வாய்ப்பு கேட்டதாகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, பாஜகவில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.

 Vijayadharani may join BJP thinking that Congress will no longer exist NTK Chief Seeman Slams

பாஜகவில் இணைந்த விஜயதாரணியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விஜயதாரணி பாஜகவில் இணைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், இனி காங்கிர்ஸ் கட்சியே இருக்காது என நினைத்து அவர் பாஜகவுக்கு போயிருக்கலாம் எனப் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-

பாஜக வாய்ப்பு கொடுக்காது: போகனும் என்று தோன்றியிருக்கு போயிருக்காங்க.. இனிமேல் காங்கிரசே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை என்று நினைத்து பாஜகவிற்கு சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது மதித்து 3 முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் பாஜக மாதிரி கட்சியெல்லாம் சேரும் போது செய்தி.. அவ்வளவு தான் அதுக்கு பிறகு இறந்தால் கூட செய்தி வருமா என்று தெரியாது.. காங்கிரஸ் கட்சி கூட 3 முறை தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தது.

வாக்கு எந்திரத்தை வைத்து எதுவும் மாற்றம் செய்ய முடியாது. மக்கள் கையில் எதுவும் இருக்காது. ஒரு பட்டனை அழுத்தினால் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அந்த விளக்கு எரியும். இப்போது 400 இடம் என்று சொல்கிறார்கள். 405 கூட பெறுவார்கள். அதற்கு குறையாது. அவர்களிடம் ஒரு கையில் நோட்டு பெட்டி.. மற்றொரு கையில் ஓட்டு பெட்டி இருக்கிறது. எல்லாரும் அவர்கள் முன்னாடி போட்டு இருக்கோம் முட்டி. வேறு என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது.

ஈவிஎம் எந்திரம்: இந்தியா, நைஜீரியா, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் மட்டும் தான் வாக்கு எந்திரம் வைத்து தேர்தல் நடத்துகிறார்கள். அமெரிக்கா, ரஷியா, ஈவிஎம் எந்திரம் தயாரித்து அனுப்பும் ஜப்பான் கூட வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தலை நடத்துகிறார்கள்.. நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களிடம் எத்தனை சோதனைகள் செய்கிறீர்கள்.

சந்திர மண்டலத்திற்கு சந்திராயன் அனுப்பியது இங்கு இருந்து தானே. இங்கே இருந்து கொண்டே சந்திராயனை கட்டுப்படுத்தி இயக்க முடிகிறது என்றால், நான் சீமான் அம்மாக்கிட்ட பேசுகிறதை டெல்லியில் உங்களால் ஒட்டு கேட்கிற முடிகிறது என்றால்.. இந்த வாக்கு எந்திரத்தை உங்களால் ஹேக் செய்ய முடியாதா என்ன? இவ்வாறு சீமான் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+