"பொன்முடிக்கு அடுத்த சிக்கல்?" செம்மண் குவாரி முறைகேடு வழக்கு.. இன்று விசாரணை!
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூா் அடுத்துள்ள பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் அள்ளியதாகப் புகார் எழுந்தது.

இதன் மூலம் அரசுக்கு சுமார் 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதமசிகாமணி, உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு 2012இல் விழுப்புரம் குற்றப் பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடந்து வந்த போதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேர் பிறழ் சாட்சியமளித்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவர் மட்டுமே ஆஜராகினர்.
மற்றவர்கள் நேரில் ஆஜராகாத நிலையில், அதற்கான காரணத்தை திமுக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications