விழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே 10ம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமி முன்பகை காரணமாக உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் கலிய பெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மரண வாக்கு மூலம் அளித்த போது, எப்படி தன்னை கவுன்சிலர் முருகனும் கலிய பெருமாளும் தீ வைத்து எரித்தார்கள் என்பது பற்றி கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி உள்ளது அதிமுக தலைமை.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட காரணத்தாலும், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (சிறுமதுரை புதுக்காலனி கழகச் செயலாளர்), முருகன் (சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications