இன்னொரு சான்ஸ் இருக்கு.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். இதுவரை மொத்தம் 13 லட்சம் பேர் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் இடம்பெறுபவர்கள் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற்றன. பின்னர் டிச.19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர் க்கு முன்பாக அதாவது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், இரட்டை பதிவு என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து டிசம்பர் 19 முதல் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர். எஸ்ஐஆர் பணியில் இறந்ததாக நீக்கப்பட்ட 26 லட்சம் பேரில் ஒருசிலர் மட்டுமே தாங்கள் உயிருடன் இருக்கும் நிலையில் நீக்கியதாக ஆட்சேபம் தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.
எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கக்கோரி நேற்று வரை (FORM 6) 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 35,646 பேர் (FORM 7) சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 35,646 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.44 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சுமார் 53 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. இதனால் 53.60 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் தான் வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நாளில் இருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்திருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications