அப்பத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான்.. மாயமான உறவுகள்.. பாழாய்ப்போன நாகரீகத்தால்
சென்னை: உறவுகளின் பெயர்களை போடாமல் சிம்பிள் என்ற பெயரில் திருமணம் உள்ளிட்ட இல்ல விஷேசங்களின் பத்திரிக்கைகளை அடிக்கிறார்கள். இதனால் இன்றைய தலைமுறையினர் தங்கள் உறவுகள் யார்? யார்? என்பதே தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். உறவுகளை தொலைக்கும் நமது நாகரீக சுபமுகூர்த்த பத்திரிக்கைகள் பற்றி இப்போது பார்ப்போம்.
முன்பெல்லாம் திருமணம் உள்ளிட்ட இல்ல சுபமுகூர்த்த பத்திரிக்கைகளில் தாய்மாமன்கள் தொடர்ச்சி, அத்தை மாமக்கள், சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி தொடர்ச்சி என உறவுகளின் பட்டியலே பெரிதாக இருக்கும்.
இதில் சாதிய மற்றும் சொந்த உறவுகளை தாண்டி, வரவேற்பாளர்கள் தொடர்ச்சி என ஊரில் உள்ள பலரது பெயர்கள் கட்டாயம் இருக்கும். இதில் என்பெயரை ஏன் போடலை என்று சண்டைகளும் வரும்.

தாய்மாமன்கள்
அத்தனை உறவுகளும், பத்திரிக்கைகளில் பெயர் போட்டதுக்காகவே காது குத்து, திருமணம் உள்ளிட்ட அனைத்து விஷேசங்களுக்கும் வருவார்கள். அப்படி வருபவர்களை நமது குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, இவர் தான் உன் சித்தப்பா, இவர் தான் உன் மாமா, இவங்க தான் உன் அத்தை, இவங்கதான் உன் பெரியப்பா, இவரு உனக்கு அண்ணன் வேணும்பா என சொல்லிக்கொடுப்போம்.

உறவுகள் பங்கேற்பு
அவர்களும் பாசத்தோடும், உரிமையோடும் விஷேசங்களில் கலந்து கொண்டு இல்ல நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக நிறைவு செய்வார்கள். இதன் மூலம் உறவுகளில் நடக்கும் ஒவ்வொரு வீட்டு விஷேசமும், எல்லாருக்குமே திருவிழா போல் இருக்கும். இதன் மூலம் உறவுகளுடனான பழக்க வழக்கங்கள் அதிகமாக இருக்கும். தோழமையாகவும், ஆறுதலாகவும் உறவுகள் தோள் கொடுப்பார்கள்.

ரத்த உறவுகள் மட்டும்
இப்போது அப்படியல்ல, இன்றைய தலைமுறையினர் பலர் நாகரீகம் என்ற பெயரில், உறவுகளின் பெயர்கள் யாரையும் போடாமல், அப்பா,அம்மா, தம்பி, தங்கை என ரத்த உறவுகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இதனால் இல்ல விஷேசங்கள் குறைவான உறவுகளே வரும் நிகழ்வாக மாறிவிட்டது. இத்துடன், உறவுகள் யார்? யார்? என்பது தெரியாமல் ஒரு தலைமுறையே வளர்ந்துவிட்டார்கள்.

சொந்தம்
தங்களுக்கு கிடைத்த, தாத்தா பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், அக்கா என எந்த உறவையும் தங்களது குழந்தைகளுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு சொந்தம் என்பது ரத்த சொந்தம் மட்டுமே சொந்த என்ற அளவுக்கு மாற்றிவிட்டார்கள்

மனிதம் வளர்ப்போம்
இப்போது சொல்லவருவது ஒன்றை கருத்தே.. உறவுகளை விழாக்களில் கூட சொல்லாவிட்டால், மனிதர்களை எப்படி அறிந்து கொள்ள முடியும். உறவுகளை எப்படி பிள்ளைகள் அறிவார்கள். இன்றைய தலைமுறையினருக்கு உறவு முறைகளே தெரிவதில்லை. இப்போது நவீனம், மாற்றம் என்ற பெயரில் மொத்த உறவுகளையும் தொலைத்து வருகிறோம் என்பதே வேதனையான உண்மை.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications