ஜெயலலிதா பற்றி பேச்சு: "வீர பெண்மணியாக பார்க்கிறோம்" நிர்மலா சீதாராமனை புகழ்ந்த அதிமுக மாஜி அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலுநாச்சியருக்கு அடுத்து ஜெயலலிதாவுக்கு அடுத்து.. எங்கள் கட்சியின் சார்பில் அந்த அம்மாவுக்கு (நிர்மலா சீதாராமன்) எனது அன்பான வணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன். இப்படி ஒரு வீராங்கனையை நான் பார்த்தது இல்லை என்று நிர்மலா சீதாராமனை புகழ்ந்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். தமிழில் பேசிய நிர்மலா சீதாராமன், திமுகவை மிகக் கடுமையாக சாடினார். நிர்மலா சீதாராமன் பேசுகையில், 'மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

We see a heroic woman, Dindigul Srinivasan praised Nirmala Sitharaman

மணிப்பூர் மட்டுமின்றி, ராஜஸ்தான், டெல்லி என பெண்களுக்கு எந்த பகுதியில் துன்புறுத்தல் நடந்தாலும் அதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் இருக்கக் கூடாது. 25ம் தேதி மார்ச் மாதம் 1989ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக.. ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்துட்டு, அவமானப்படுத்திவிட்டு, எல்லாரும் உட்கார்ந்து சிரித்தனர்..

இதை கண்டு ஜெயலலிதா கோபம் அடைந்து வெளியேறினார். அப்போது அவர் சபதம் எடுத்தார். நான் திரும்பி வர மாட்டேன்.. வந்தால் முதல்வராகத்தான் வருவேன் என்று சொன்னார்.. எனவே அந்த கட்சி திமுக.. இன்று திரௌபதியை குறிப்பிட்டு பேசுறாங்க.. இது என்ன அநியாயம்" என்று திமுகவையும் ஒரு பிடி பிடித்தார். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாராட்டி பேசியுள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், "தமிழ்நாட்டு எம்.பிக்கள் உள்ளே உட்காருங்கள்.. நான் பேசுவதை கேளுங்கள்.. எய்ம்ஸில் ஆயிரகணக்கான மாணவர்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். 1989- ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து அசிங்கப்படுத்திய திமுகவின் எம்.பிக்களாக வந்து இருக்கீங்க... இனிமேல் இந்த சபைக்கு நான் வரமாட்டேன்..

இனிமேல் முதல்வராகத்தான் வருவேன் என்று வீரவசனம் பேசிய ஜெயலலிதா முதல்வராக்த்தான் வந்தார். ஆனால் திரெளபதியை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று திமுகவை விமர்சித்த வீரப்பெண்மனியாக திகழ்கிறார். வேலுநாச்சியருக்கு அடுத்து ஜெயலலிதாவுக்கு அடுத்து.... எங்கள் கட்சியின் சார்பில் அந்த அம்மாவுக்கு (நிர்மலா சீதாராமன்) எனது அன்பான வணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன். இப்படி ஒரு வீராங்கனையை நான் பார்த்தது இல்ல" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+