தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும்.. வானிலை மையம் அளித்த ஹாப்பி ரிப்போர்ட்!
தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரம் அடையும் என்று வானிலை மையம் தெரிவித்து வருகிறது. இன்றிலிருந்து தமிழகத்தில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, சேலம், கோவை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்தது. அங்கு யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டது.
ஆனால் தற்போது எங்கும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை.
இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரமடைய உள்ளது. இன்று தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும். அதேபோல் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications